பாதுகாப்புக்காரணங்களுக்காக தேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை தேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை இலங்கையிலுள்ள அனைத்து தேவாலயங்களின் பங்குத்தந்தையர்களுக்கும், மற்றும் மறைமாவட்ட ஆயர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலும் நீர்கொழும்பு கட்டுவான கட்டாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்திலும் மட்டக்களப்பு சீயோன் ஆலயத்திலும் வழிபாடுகள் இடம்பெற்றவேளை தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது அப்பாவிப் பொதுமக்கள் மிகவும் மிலேச்சத்னமாக கொல்லப்பட்டனர். இதுவரை 310 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 500 க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமையினால் குறிப்பிட்ட நாட்களுக்கு ஆலயங்களில் வழிபாடுகளை நடத்துவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளதோடு தங்கள் தங்கள் வீடுகளில் செபிக்கும்படியாகவும் கோரிக்கைவிடுத்துள்ளார்.
Source: New feed